தமிழ் முஸ்லிம் உறவு குறித்த கலந்துரையாடல்
| மூதூரில் அகதி வாழ்க்கை |
தமிழீழத் தாயக மீட்புப் படை என்கின்ற பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்தப் பிரசுரம் ஏற்படுத்தியுள்ள நிலை, மற்றும் சற்று நெருக்கடியில் இருக்கும் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்து திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும், மூதூர் பிரதேச முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவரும், மஜ்லிஸ் ஷீராவின் செயலருமான எம் எம் ஜவாத் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உள்ள சில பரஸ்பர சந்தேகங்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு குறித்த விவகாரங்கள், திருகோணமலை வான் தாக்குதலுக்கு முஸ்லிம் தரப்பில் கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படாதது, முஸ்லிம் பகுதிகளில் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டது போன்றவையும், இரு சமூகத்தினரும் அமைதியுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலை நேயர்கள் ஒலி வடிவில் கேட்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக