இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

திங்கள், 16 நவம்பர், 2015

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!


 
 
وَإِذْ قُلْنَا لِلْمَلاَئِكَةِ اسْجُدُواْ لآِدَمَ فَسَجَدُواْ إِلاَّ إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ
 
 
'ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்' என்று நாம் கூறினோம்.
    ஆனால் அவ்விருவரையும் ஷைத்தான் அதிலிருந்து தடம் புரளச் செய்தான். அவர்கள் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவ்விருவரையும் அவன் அப்புறப்படுத்தினான். (அல்குர்ஆன் 2:35,36)
    பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கென ஆசாபாசங்களோ உரிமைகளோ கிடையாது என்று தான் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு 'ஆன்மா' இருக்கிறதா என்ற வாதப்பிரதி வாதங்கள் கூட நடந்துள்ளன.
    சொத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. தங்கள் பெயரில் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்ள முடியாது. திருமணம் நடக்கு முன் தந்தையையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கி பெண்களை பகுத்தறிவு இல்லாத பிராணிகளைப் போல் நடத்தி வந்தனர்.
    இன்றைக்கும் கூட பெண்ணுரிமை என்ற பெயரால் கவர்ச்சி காட்டி ஆண்களை மயக்கக் கூடியவர்களாகவும் தாங்கள் நடந்து கொள்வதற்கு உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர்.
    அந்தக் கோட்பாடுகளை திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றன.
    கடவுள் முதன் முதலில் ஒரே ஜோடிளைத்தான் நேரடியாகப் படைத்தான். அவர்களிலிருந்து பல்கிப் பெருகியதே மனித சமுதாயம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
    கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட தம்பதிகள் குறித்தே மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.
    அவ்விருவரையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கப் பூங்காவில் தங்கச் செய்து அதன் பாக்கியங்களை அனுபவித்துக் கொள்ள அனுமதிக்கின்றான். அந்தக் கட்டத்தில் கடவுள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கருத்துடன் கவனிக்கத் தக்கவையாகும்.
    இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு தம்பதியரை விருந்துக்கு அழைத்தால் கணவரிடம் மட்டும் கூறினாலே போதும் என்ற நிலை இருக்கிறது. குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்ற அழைப்பின் காரணமாக - மனைவி தனியாக அழைக்கப்படா விட்டாலும் - மனைவியையும் அழைத்துச் செல்வோர் நாகரீக உலகத்திலும் இருக்கிறார்கள்.
    ஆனால் மனித சமுதாயம் உள்ளிட்ட அகில உலகையும் படைத்த இறைவன், நீங்கள் இருவரும் தங்குங்கள்! நீங்கள் இருவரும் உண்ணுங்கள்! என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறான்.
    பொதுவாக உணவுகள் விஷயத்தில் பெண்களுக்கு என தனி விருப்பம் இருப்பதை ஆண்கள் உணர்வதில்லை. ஆண்கள் எதை வாங்கிப் போடுகிறார்களோ அதை ஆக்கிப் போடுவது மட்டும் தான் மனைவியரின் வேலை என்பது தான் நடைமுறை.
    விருப்பமான உணவுகள் சமைக்கப்பட்டால் கூட சமைத்தவளை மறந்துவிட்டு அனைத்தையும் மேய்ந்து விட்டு பாத்திரத்தைக் காலியாக வைத்துச் செல்லும் கணவர்கள் ஏராளம்.
    ஆனால் படைத்த இறைவன் அப்படிக் கருதவில்லை. நீங்கள் இருவரும் விரும்பியவாறு உண்ணுங்கள் என்கிறான். பெண்களுக்கு தனி விருப்பங்கள் உள்ளன என்கிறான். ஆண் விரும்புவதைத் தான் பெண்ணும் விரும்ப வேண்டும் என்பது கிடையாது என்கிறான்.
    அது ஏதோ இந்த நூற்றாண்டில் கூறப்பட்டதன்று. நபிகள் நாயகம் காலத்தில் கூறப்பட்டதன்று. பெண்ணுரிமைக்காக பலத்த குரல் எழுப்பப்பட்ட போது கூறப்பட்டதன்று. 'ஆன்மா' இருக்கிறதா என்ற சர்ச்சை நடந்த காலத்தில் கூறப்பட்டதுமன்று.
    வேறு எவரும் படைக்கப்படாத நேரத்திலேயே, இரண்டே இரண்டு பேர் மட்டும் படைக்கப்பட்டிருந்த நேரத்திலேயே இறைவன் இவ்வாறு கூறிவிட்டான். அதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நினைவு படுத்துகிறான்.
    அதுமட்டுமின்றி இறைவன் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பித்தான். அந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கும் போதும் இருவரையும் அழைத்தே தடையுத்தரவைக் கூறுகிறான். நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள் என்ற வாசகத்திலிருந்து இதை உணரலாம்.
    அந்தக் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட மரத்தை நெருங்கினார்கள். அந்த நிகழ்ச்சி குறித்து பைபிள் கூறும் போது, ஆதம் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொண்டது போலவும், அவரது மனைவியிடம் தான் ஷைத்தான் கைவரிசையைக் காட்டியதாகவும், அவள் தான் தடையை மீறியதாகவும் குறிப்பிடுகிறது.
    பெண்கள் வழிகெட்டவர்கள், பிறரை வழி கெடுப்பவர்கள், ஆண்கள் மகா பரிசுத்தர்கள் என்று சித்தரிக்கும் வகையில் பைபிள் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.
    ஆனால் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் அதை மறுக்கின்றன.
   ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு கடவுளின் கட்டளையை இருவரும் தான் மீறினார்கள். தடை செய்யப்பட்டவைகளை விரும்புவது பெண்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. ஆண்களும் அத்தன்மையைப் பெற்றவர்கள் தாம் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
    மனிதன் என்ற தன்மை, அதாவது ஆசை, கோபம், கடவுளின் கட்டளையை மீறுதல், மனோ இச்சைக்கு அடிபணிதல் ஆகிய குணாதியங்கள் பெண்களிடம் இருப்பது போலவே ஆண்களிடமும் உள்ளன. அதனால் தான் இருவரும் பாவம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
    அது மாத்திரமின்றி தவறுகளுக்குத் தண்டனை வழங்குவதிலும் இன்றைய உலகில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.
    ஆண்களின் தவறுகள், 'ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்' என்ற வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன.
    அதே போல் தவறுகளுக்காக பெண்கள் தண்டிக்கப்படும் போது, 'பாவம் பெண்கள்! ஆண்களைப் போல் அவர்களைத் தண்டிக்கலாமா?' என்று பச்சாதாபம் காட்டப்படுகின்றது.
    அந்த இரண்டு தவறான கோட்பாடுகளையும் இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இருவரையும் உடனே வெளியேறுமாறு கட்டளையிடுகிறான்.
    ஆண் தப்புச் செய்யலாம். பெண் தப்புச் செய்யலாமா என்று கூறி பெண்களை மட்டும் தண்டிக்கவில்லை. பெண் பலவீனமானவள். அவளைத் தண்டிக்க முடியாது. நீ மட்டும் வெளியே போய் விடு என்று ஆணை மட்டும் வெளியேற்றவில்லை.
    அந்த வசனங்கள் இரண்டையும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது உடலமைப்பில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் மனிதத் தன்மையில் இருவரும் சமமானவர்களே என்று குர்ஆன் கூறுவதை உணரலாம்.
    மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கோட்பாடு தான் உலகின் முதல் கோட்பாடு மனிதர்கள் தான் அந்தக் கோட்பாடுகளை மாற்றிவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்குத் தான், முதல் தம்பதிகளுக்கு இறைவன் பிறப்பித்த கட்டளையை நினைவுபடுத்துகிறான்.
 
 
 

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்

ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர்.

பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.

கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.

தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.

பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.

நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.

பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது

திங்கள், 9 நவம்பர், 2015

ஹலாலான உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.     தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ) உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். […]Post image for ஹலாலான உழைப்பின் சிறப்பு

நீங்கள் நன்மையை விரும்புகிறீர்களா…!

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?யார் […]

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பொருள் அட்டவனை

1. அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படுதல்
2. நம் அருகில் சமீபமாக நெருங்கி இருப்பவன்
3. அவன் நிலைத்திருப்பவன்
4. அவன் நீதி வழங்குபவன் அநீதி செய்யாதவன்
5. அவன் வாக்குறுதி மாறாதவன்
6. அவன் மன்னிப்பாளன், பிழைபொறுப்பவன்
7. அவன் அனைத்து பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்
8. அவன் தீயவர்களுக்கு வழங்கும் நரகம்,நரகவாதிகளின்அவலம்
9. அவன் நல்லோருக்கு வழங்கும் சுவனபதியும்,அதன் சிறப்பும்
10. அவன் யாவற்றையும் அறிபவன், பூரண ஞானமுடையவன்
11. அவன் கிருபையாளர்களிலெல்லாம் மேலானகிருபையாளன், மன்னிக்கும் கருணையாளன், யாவரையும் மிகைப்பவனும் வல்லமை மிக்கவனுமான கருனையாளன்
12. அவனே வணக்க வழிபாட்டுக்கு உரியவன்
13. அவனே படைத்து பரிபக்குவப்படுத்துபவன் பாதுகாப்பவன்
14. அவனே யாவரையும், யாவற்றையும் படைப்பவன் உருவாக்குபவன்
15. அவனது அருட்கொடைகள், பாக்கியங்கள், நற்பேறுகள்
16. அவனது அழகிய திருநாமங்கள்
17. அவனது அருள்பற்றி நம்பிக்கை இழத்தல் கூடாது
18. அவனையே யாவும், யாவரும் துதிசெய்கின்றன. அவனையே துதிப்பீர்களாக
19. அவனுக்கு படைப்பது எளிது
20. அவனுக்கே புகழ் அனைத்தும்
21. அவனிடமே யாவும், யாவரும் மீளவேண்டும்
22. அவனிடமிருந்து பாவிகளுக்கு வரும் வேதனை, தண்டனை, அழிவு ஆகியன
23. அஃராப்(சிகரங்கள்)
24. அகழ்போர் பற்றி
25. அடைமானம்
26. அநாதைகள்
27. அபூபக்கர் (ரழி) (குகையில் இருவரில் ஒருவர்)
28. அரபாத் பெருவழி
29. அரபி மொழி
30. அவதூறு
31. அமானிதம்
32. அறிஞர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுதல்
33. அறுத்துப்பலியிடுதல் அல்லாஹ்வுக்கே
34. இணை வைத்தலும் அதன் விளைவுகளும்
35. இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கோரலாகாது
36. இத்தா
37. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்
38. இறைநேசர்கள் யார்?
39. இறைவனை இம்மையில் காண முடியுமா?
40. இறைவன் அல்லாதவர்களை பிரார்த்திக்கலாகாது
41. இறை வேதத்தில் சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுத்தல்
42. உண்ணும் ஒழுங்கு முறைகள்
43. உலகத்தூதர் முஹம்மது(ஸல்)
44. உளவு பார்த்தல்
45. ஒப்பந்தங்கள்
46. ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது
47. ஓரினப் புணர்ச்சியும் விபச்சாரமும்
48. கஃப ஆலயம் (ஹஜ்)
49. கடன்
50. கலந்தலோசித்தல்
51. குர்ஆனும் அதன் சிறப்புகளும்
52. குர்ஆனுக்கு முந்திய வேதங்களும், அவை கொடுக்கப்பட்டோரும்
53. குர்ஆனைத் திருத்திக்கூறவும். முரண்பாடுகள் காணவும்.மறைக்கவும் முற்படுவோர் தோல்வியே அடைவார்கள்
54. குர்ஆனைப் போன்றோ அல்லது அதில் ஒரு சிலதோ எவரும் கொண்டுவர முடியாது
55. குர்ஆனின் தூய்மையை, மாற்றமில்லாமையை அல்லாஹ்வே பாதுகாக்கிறான்
56. குர்ஆனை ஓதும் ஒழுங்கு முறைகள்
57. குர்ஆன் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கிறது
58. குர்ஆனை பரிகசிக்க கண்டால்
59. குர்ஆன் இறைவேதம் என்பதற்கு நிரூபணம்
60. குர்ஆன் கூறும் அற்புதங்கள்
61. குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள்
62. அஹ்மத்
63. முஹம்மத் (ஸல்)
64. அல்யஸஃ (அலை)
65. அபுலஹப்
66. ஆஸர்
67. ஆதம் (அலை)
68. இப்றாஹீம் (அலை)
69. ஹாமான்
70. ஹூது (அலை)
71. உஸைர் (அலை)
72. சாலிஹ் (அலை)
73. சுஐய்பு (அலை)
74. சுலைமான்
75. சாமிரி
76. ஜக்கரிய்யா (அலை)
77. ஜிப்ரயீல்
78. ஜைத் (ரலி)
79. தாவூத்
80. துல்கிப்லு
81. துல்கர்னைன்
82. நூஹ்
83. ஃபிர்அவ்ன்
84. மர்யம் (அலை)
85. மாலிக் (அலை)
86. மூஸா (அலை)
87. மீக்காயீல்
88. யஹ்யா (அலை)
89. யாக்கூப்
90. யூனுஸ் (அலை)
91. யூசுப் (அலை)
92. லுக்மான் (அலை)
93. லூத் (அலை)
94. குற்றங்களுக்குரிய இவ்வுலக தண்டனைகள்
95. கொலை
96. கோள், புறம், குறைகூறல்
97. சத்தியமும், அதன் பரிகாரமும்
98. சலாம் கூறல்
99. சாட்சிகள்
100. சாட்சியங்களை மறைப்பதும் சாட்சி கூறமறுப்பதும
101. சுவீகாரம்
102. செலவு செய்வதின் இலக்கணம்
103. தடுக்கப்பட்ட உணவுகளும், அனுமதிக்கப்பட்ட உணவுகளும்
104. தயம்மும், ஒளூ
105. தலாக், லிஆன், லிஹார், ஈலா
106. திக்ரு துஆ செய்யும் ஒழுங்கு முறைகள்
107. திருட்டு
108. திருமணம்
109. தீர விசாரித்தல்
110. தொழுகை
111. அஸர் தொழுகை
112. இறைவனுக்கே தொழுகை
113. ஐவேளை தொழுகை
114. தஹஜ்ஜத் தொழுகை
115. தொழாதோர் கதி
116. தொழுகையில் ஓதுதல்
117. தொழுகை மானக்கேட்டையும் தீமையையும் விலக்கும்
118. தொழுகையும் நயவஞ்சகர்களும்
119. தொழுகையில் பேணுதல்
120. தொழுகையும், பொறுமையும் கொண்டு உதவி
121. தொழுகையை வீணாக்கியோர்
122. தொழுகை நேரங்கள்
123. தொழுகையின் அவசியமும் ஜகாத்தின் அவசியமும்
124. ருகூஃ, சுஜூது
125. ஜமாஅத் தொழுகை
126. ஜும்ஆத் தொழுகை
127. ஜனாஸாத் தொழுகை
128. பிரயாணத் தொழுகை
129. நபிமார்களும் மனிதர்களே!
130. நபியின் மீது ஸலாவாத் கூறல்
131. நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை
132. நன்மையை ஏவதல், தீமையை தடுத்தல்
133. நீதி, நேர்மை
134. நேர்ச்சைகள் இறைவனுக்கே
135. நோன்பு
136. பர்தா
137. பள்ளிவாயில்கள்
138. பாகப்பிரிவினை
139. பாரம்பரியத்திற்கு எந்த மதிப்பும் இல்லை
140. பால்குடிச் சட்டங்கள்
141. பிரச்சாரத்தில் விவேகமும், நளினமும்
142. பிறமதக் கடவுளர்களை ஏசலாகாது
143. பிறர் இல்லங்களில் அனுமதியின்றி நுழையலாகாது
144. பெண் உரிமை, இல்லறம்
145. பெரும்பான்மைக்கு மதிப்பில்லை
146. பெற்றோர்களைப் பேணல்
147. பொய்
148. பொறாமை, கோபம்
149. போரில் புறமுதுகு காட்டல்
150. போர் வெற்றியில் கிடைக்கின்ற பொருட்கள்
151. மக்கத்து காபிர்களின் கடவுள் கொள்கை
152. மணம் முடிக்கத்தக்கவர், தகாதவர்
153. மதுவும், சூதும்
154. மமதை
155. மறுமையில் பரிந்துரை
156. மறைவானவற்றை இறைவனே அறிவான்
157. மனோ இச்சைகளுக்கு வழிப்படுதல்
158. மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை
159. மார்க்கத்தில் பிரிவினை இல்லை
160. மார்க்கத்தை மறைப்பதும், அதன் மூலம் உலக இலாபங்களை நாடுவதும்
161. மாற்றாருடன் நடந்து கொள்ளும் முறை
162. முன்னோர்களை பின்பற்றுதல்
163. யாசித்தல்
164. லஞ்சமும் பொருளாதார மோசடியும்
165. வட்டி
166. வஸீலா
167. ஜகாத்பெற தகுதியுடையோர்
168. ஏகத்துவம்
169. பிரார்த்தனை (துஆ)
170. அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்தல்
171. இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ்
172. மரணம்
173. தன் வினை தன்னையே சுடும்

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி


பதிப்புரை
ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியர் முன்னுரை
பொருளடக்கம்
அரபியர்கள் நிரபரப்பு மற்றும் வமிசம், ஆட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்

-- அரபிய சமுதாயங்கள்

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

-- யமன் நாடு (ஏமன்)

-- ஹீரா நாடு

-- ஷாம் நாடு (ஸிரியா)

-- ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்

-- ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்

-- அரசியல் பின்னணி

அரபியர்களின் சமய நெறிகள்

-- சமயங்களின் நிலைமைகள்

அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

-- சமுதாய அமைப்பு

-- பொருளாதாரம்

-- பண்பாடுகள்

வமிசம், பிறப்பு, வளர்ப்பு

நபியவர்களின் வமிசமும் குடும்பமும்

-- நபியவர்களின் வமிசம்

-- நபியவர்களின் குடும்பம்

பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்

-- பிறப்பு

-- ஸஅது கிளையாரிடம்

-- நெஞ்சு திறக்கப்படுதல்

-- பாசமிகு தாயாரிடம்

-- பரிவுமிக்க பாட்டனாரிடம்

-- பிரியமான பெரியதந்தையிடம்

-- கதீஜாவை மணம் புரிதல்

-- கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்

-- நபித்துவத்திற்கு முன் - ஒரு பார்வை

இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்புப் பணி

மக்கா வாழ்க்கை

நபித்துவ நிழலில்

-- ஹிரா குகையில்

-- ஜிப்ரீல் வருகை

-- இறைச் செய்தி தாமதம்!

-- மீண்டும் ஜிப்ரீல்

-- வஹியின் வகைகள்

முதல் கால கட்டம்

அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்

-- இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்

-- முந்தியவர்கள்!

-- தொழுகை

இரண்டாம் கால கட்டம்

-- பகிரங்க அழைப்பு

-- நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்

-- ஸஃபா மலை மீது...

-- ஹாஜிகளைத் தடுத்தல்

-- அழைப்புப் பணியில் இடையுறுகள்

-- துன்புறுத்துதல்

-- குறைஷிகளும் நபியவர்களும்...

-- குறைஷியர் குழுவும் அபூதாலிபும்

-- அபூதாலிபை மிரட்டுதல்

-- மீண்டும் குறைஷியர்கள்...

-- நபியவர்கள் மீது அத்துமீறல்

-- அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி

-- ஹபஷாவில் அடைக்கலம்

-- இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்

-- முஹாஜிர்கள் திரும்புதல்

-- இரண்டாவது ஹிஜ்ரா

-- குறைஷியர்களின் சூழ்ச்சி

-- நபியவர்கள் மீது கொலை முயற்சி

-- ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்

-- உமர் இஸ்லாமைத் தழுவுதல்

-- நபியவர்களுக்கு முன் உத்பா

-- பேரம் பேசும் தலைவர்கள்!

-- அபூஜஹ்லின் கொலை முயற்சி

-- சமரச முயற்சி

-- மறு ஆலொசனை

-- அபூதாலிபின் முன்னெச்சரிக்கை

முழுமையாக ஒதுக்கி வைத்தல்

-- தீய தீர்மானம்

-- “கணவாய் அபூதாலிபில்“ மூன்று ஆண்டுகள்

-- கிழிக்கப்பட்டது தீர்மானம்!

-- குறைஷிகளின் கடைசிக் குழு

துயர ஆண்டு

-- அபூதாலிப் மரணம்

-- துணைவி கதீஜா மரணம்

-- அடுக்கடுக்கான துயரங்கள்

-- ஸவ்தா உடன் மறுமணம்

பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் தூண்டுகோல்கள்

மூன்றாம் கால கட்டம்

மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு

-- தாயிஃப் நகரில்

கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும்

-- இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்

-- ஆறு மேன்மக்கள்

-- ஆயிஷாவை மணமுடித்தல்

மிஃராஜ்

அகபாவில் முதல் ஒப்பந்தம்

-- மதீனாவில் அழைப்பாளர்

-- மகிழ்ச்சி தரும் வெற்றி

அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்

-- உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்

-- ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஒப்பந்தத்தின் பின்விளைவை உணர்த்துதல்

-- 12 தலைவர்கள்

-- ஷைத்தான் கூச்சலிடுகிறான்

-- குறைஷிகளின் எதிர்ப்பு

-- குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

ஹிஜ்ராவின் தொடக்கங்கள்

தாருந் நத்வா

-- நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்

நபியவர்கள் ஹிஜ்ரா செல்லுதல்

-- குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்

-- சுற்றி வளைத்தல்

-- நபியவர்கள் புறப்படுகிறார்கள்

-- வீட்டிலிருந்து குகை வரை

-- இருவரும் குகைக்குள்

-- மதீனாவின் வழியினிலே

-- “குபா”வில்

-- மதீனாவில்

மதீனா வாழ்க்கை - அழைப்பு, போர், வெற்றி

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

-- அல்மஸ்ஜித் அந்நபவி

-- சகோதரத்துவ ஒப்பந்தம்

-- இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

-- நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஆன்மீகப் புரட்சிகள்

யூதர்களுடன் ஒப்பந்தம்

ஆயுதமேந்தித் தாக்குதல்

-- குறைஷியர்களின் அச்சுறுத்துதலும்

-- அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

-- குறைஷிகளின் மிரட்டல்

-- போர் புரிய அனுமதி

-- இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும்

பெரிய பத்ர் போர்

-- போருக்குரிய காரணம்

-- இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

-- இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

-- மக்காவில் எச்சரிப்பவர்

-- மக்காவாசிகள் போருக்குத் தயார்

-- மக்கா நகர படையின் அளவு

-- பக்ர் கிளையினரை அஞ்சுதல்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- வியாபாரக் கூட்டம் தப்பித்தது

-- திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

-- இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

-- ஆலோசனை சபை

-- இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

-- கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

-- மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

-- மழை பொழிதல்

-- முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

-- படையை வழி நடத்துவதற்கான இடம்

-- படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

-- போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

-- இரு படைகளும் நேருக்கு நேர்

-- நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

-- ஒண்டிக்கு ஒண்டி

-- எதிரிகளின் பாய்ச்சல்

-- நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

-- வானவர்கள் வருகிறார்கள்

-- எதிர் பாய்ச்சல்

-- நழுவுகிறான் இப்லீஸ்

-- பெரும் தோல்வி

-- அபூஜஹ்லின் வீம்பு

-- கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

-- இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

-- இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- தோல்வியை மக்கா அறிகிறது

-- வெற்றியை மதீனா அறிகிறது

-- இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

-- வாழ்த்த வந்தவர்கள்

-- கைதிகளின் விவகாரம்

-- இப்போர் குறித்து குர்ஆன்

பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில்

-- ஸுலைம் குலத்தவருடன் போர்

-- நபியவர்களைக் கொல்ல திட்டம்

-- கைனுகா கிளையினருடன் போர்

-- யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

-- கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்

-- முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

-- ஸவீக் போர்

-- தீ அம்ர் போர்

-- கயவன் கஅபை கொல்லுதல்

-- பஹ்ரான் போர்

-- ஜைதுப்னு ஹாஸா படைப் பிரிவு

உஹுத் போர்

-- குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்

-- குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்

-- அவசர நிலை

-- எதிரிகள் மதீனா எல்லையில்

-- தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்

-- படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்

-- படையைப் பார்வையிடுதல்

-- உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்

-- முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை

-- மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி

-- தற்காப்புத் திட்டம்

-- நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்

-- மக்கா படையின் அமைப்பு

-- குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்

-- குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்

-- போரின் முதல் தீ பிழம்பு

-- கொடியை சுற்றிக் கடும் போர்

-- மற்ற பகுதிகளில் சண்டை

-- அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்

-- நிலைமையைக் கட்டுப்படுத்துவது

-- மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி

-- போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு

-- இணைவைப்பவர்களுக்குத் தோல்வி

-- அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு

-- காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்

-- நபியவர்களின் நிலை

-- முஸ்லிம்கள் சிதறுதல்

-- நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை

-- நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்

-- நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்

-- எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்

-- செயற்கரிய வீரதீரச் செயல்கள்

-- நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!

-- நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்

-- சண்டாளன் உபை கொல்லப்படுதல்

-- நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்

-- இணைவைப்பவர்களின் இறுதித் தாக்குதல்

-- போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்

-- இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

-- மலைக் கணவாயில்

-- அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

-- பத்ரில் சந்திக்க அழைத்தல்

-- எதிரிகளின் நிலை அறிதல்

-- தியாகிகளை கண்டெடுத்தல்

-- தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

-- நபியவர்களின் பிரார்த்தனை

-- மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- மதீனாவில் அவசர நிலை

-- ஹம்ராவுல் அஸத் போர்

-- இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது

-- இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்

உஹுத் போருக்குப் பின் அனுப்பப்பட்ட படை

-- அபூ ஸலமா படைப் பிரிவு

-- அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்

-- ரஜீஃ குழு

-- பிஃரு மஊனா

-- நழீர் இனத்தவருடன் போர்

-- நஜ்து போர்

-- இரண்டாம் பத்ர் போர்

-- தூமத்துல் ஜன்தல் போர்

அல்அஹ்ஜாப் போர்

பனூ குரைளா போர்

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

-- ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்

-- முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு

-- லஹ்யான் போர்

-- குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

-- நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்

-- முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்

-- 1) நயவஞ்சகர்களின் கூற்று

-- 2) அவதூறு சம்பவம்

குழுக்களும் படைப்பிரிவுகளும்

ஹுதைபிய்யா

-- உம்ரா

-- முஸ்லிம்களே புறப்படுங்கள்!

-- மக்காவை நோக்கி

-- தடுக்க முயற்சித்தல்

-- மாற்று நடவடிக்கை

-- நடுவர் வருகிறார்

-- குறைஷிகளின் தூதர்கள்

-- அல்லாஹ்வின் ஏற்பாடு

-- குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்

-- கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

-- சமாதான ஒப்பந்தம்

-- அபூஜந்தல் மீது கொடுமை

-- உம்ராவை முடித்துக் கொள்வது

-- பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

-- ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

-- முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

-- ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

-- குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இரண்டாவது கட்டம் - புதிய சகாப்தம்

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

-- 1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்

-- 2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 3) பாரசீக மன்னருக்குக் கடிதம்

-- 4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்

-- 6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்

-- 7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த

-- தூகரத் (அ) காபா போர்

கைபர் போர்

-- போருக்கான காரணம்

-- கைபரை நோக்கி

-- இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை

-- நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்

-- கைபரின் வழியில்

-- வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்

-- கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை

-- கைபரின் கோட்டைகள்

-- இஸ்லாமியப் படை முகாமிடுதல்

-- போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்

-- போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்

-- பேச்சுவார்த்தை

-- அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்

-- கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்

-- ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை

-- ஸஃபிய்யாவுடன் திருமணம்

-- நஞ்சு கலந்த உணவு

-- கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- ஃபதக்

-- வாதில் குரா

-- தைமா

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும்

-- தாதுர் ரிகா

உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல்

முஃதா யுத்தம்

-- யுத்தத்திற்கான காரணம்

-- படைத் தளபதிகள்

-- நபியவர்களின் அறிவுரை

-- படையை வழியனுப்புதல்

-- இஸ்லாமியப் படை புறப்படுதலும்

-- ஆலோசனை சபை

-- எதிரியைக் களம் காண

-- யுத்தத்தின் ஆரம்பம்

-- அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது

-- சண்டை ஓய்கிறது

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- யுத்தத்தின் தாக்கம்

-- தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

-- அபூகதாதா படைப் பிரிவு

மக்காவை வெற்றி கொள்வது

-- உடன்படிக்கையை மீறுதல்

-- அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

-- மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

-- மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

-- மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை

-- நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்

-- மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

-- குறைஷிகளின் அதிர்ச்சி

-- இஸ்லாமியப் படை “தூதுவா“வை அடைகிறது

-- இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

-- நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள்

-- நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள்

-- உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது

-- கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்

-- கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்

-- “ஸலாத்துல் ஃபத்ஹ்“ அல்லது “ஸலாத்துஷ் ஷுக்ர்“

-- பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

-- ஸஃப்வான் இப்னு உமய்யா

-- நபியவர்களின் சொற்பொழிவு

-- நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

-- பைஆ வாங்குதல்

-- மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்

-- படைப் பிரிவுகளும் குழுக்களும்

மூன்றாம் கட்டம்

ஹுனைன் யுத்தம்

-- அவ்தாஸில் எதிரிகள்

-- போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு

-- நபியவர்களின் உளவாளி

-- மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி

-- முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்

-- முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்

-- எதிரிகள் தோல்வி அடைகின்றனர்

-- எதிரிகளை விரட்டுதல்

-- கனீமா பொருட்கள்

-- தாயிஃப் போர்

-- ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்

-- நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

-- ஹவாஜின் குழுவினன் வருகை

-- உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்

மக்கா வெற்றிக்குப் பின்

-- ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்

-- படைப் பிரிவுகள்

தபூக் போர்

-- போருக்கான காரணம்

-- ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

-- நிலைமை மேலும் மோசமாகுதல்

-- நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

-- ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

-- முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு

-- தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை

-- தபூக்கில் இஸ்லாமியப் படை

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- பின்தங்கியவர்கள்

-- போரின் தாக்கங்கள்

-- இப்போர் குறித்து குர்ஆன்

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

போர்கள் - ஒரு கண்ணோட்டம்

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தை தழுவுகிறார்கள்

-- குழுக்கள்

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்

ஹஜ்ஜத்துல் விதா

-- ஹஜ்ஜத்துல் விதா உரை

இறுதிப் படை

உயர்ந்தோனை நோக்கி

-- புறப்படுவதற்கான அறிகுறிகள்

-- நோயின் ஆரம்பம்

-- இறுதி வாரம்

-- மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு

-- நான்கு நாட்களுக்கு முன்பு

-- மூன்று நாட்களுக்கு முன்பு

-- இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு

-- ஒரு நாள் முன்பு

-- வாழ்வின் இறுதி நாள்

-- மரணத் தருவாயில்

-- கவலையில் நபித்தோழர்கள்

-- உமரின் நிலை

-- அபூபக்ரின் நிலை

-- அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

-- அடக்கம் செய்வது

நபியவர்களின் குடும்பம்

-- பலதார மணம் புரிந்தது ஏன்?

பண்புகளும் நற்குணங்களும்

-- பேரழகு உடையவர்

-- உயர் பண்பாளர்

கலைச் சொல் அகராதி